தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான அபிராமி 2001ம் ஆண்டு நடிகர் அர்ஜுன் நடித்த தமிழில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் அதன் பின் இவர் மிடில் கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
மேலும் அதன் பின் இவர் 2014ம் ஆண்டே சிறு வயது நண்பர் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை ஜோதிகா நடித்த 36 வயதினிலே என்ற திரைப்படம் படம் மூலம் ரீ-என்ட்ரீ கொடுத்தார். அதுமட்டுமின்றி நடிகை அபிராமி அன்னையர் தின ஸ்பெஷலாக ஒரு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது 40 வயதாகும் நடிகை அபிராமி மற்றும் அவரது கணவர் ராகுல் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார்களாம். கடந்த வருடம் மகளை தத்தெடுத்ததாகவும் அவருக்கு கல்கி என பெயர் வைத்துள்ளதாக பதிவு செய்துள்ளார்…
View this post on Instagram