விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விக்ரமன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது கருத்துக்களை தைரியமாக முன் வைப்பதால் விக்ரமனுக்கு பல ஆதரவு கிடைத்து ரன்னர் பட்டம் வென்றார்.
இருப்பினும் சிலர் இவரை பூமர் விக்ரமன் என்று சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர். சமீபத்தில் கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் விக்ரமன் மீது புகார் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விக்ரமன் என்னை காதலிப்பதாக கூறி என்னிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்கள் பல பொருட்டுகளை வாங்கியுள்ளார்.
மேலும் விக்ரமன் தன்னுடைய மேனேஜர் என்று ஒரு பெண்ணை சொல்லி விட்டு அந்த பெண்ணுடன் உறவில் இருந்தார். இந்த விஷயம் கடைசியில் எனக்கு தெரிய வந்தது. விக்ரமன் இது மட்டுமின்றி 15 மேற்பட்ட பெண்களுடன் உறவில் இருந்தது எனக்கு தெரியவந்தது. என்று கூறியுள்ளார்.
கிருபா முனுசாமி , விக்ரம் உடன் பேசிய மற்றும் அவருடன் எடுத்த கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்…