அட பிரபல பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியன் மகன் இந்த பிரபலமா ?? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!! பட்டிமன்ற பேச்சுக்கள் மூலம் பிரபலமானவர் திண்டுக்கல் ஐ.லியோனி, இவருக்கு தமிழர்கள் மத்தியில் அறிமுகமே தேவையில்லை.
திண்டுக்கல் ஐ. லியோனி என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராகவும் உள்ளார்.இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர். இவர் கங்கா கௌரி என்ற திரைப்படமொன்றில் நடித்துள்ளார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது பெற்றிருக்கும் திண்டுக்கல் லியோனிக்கு சினிமா மீதும் காதல் உண்டு. இவர் கங்கா கெளரி என்னும் படத்திலும் நடித்திருந்தார். ஆனால் தொடர்ந்து சொல்லிக்கொள்ளும்படி திரைவாய்ப்பு எதுவும் வரவில்லை.
இந்நிலையில் இவரது மகனான லியோ சிவக்குமார் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார், அழகிய கண்ணே என்ற இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.
இன்று முதல் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், படத்திற்கான பூஜை போட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.