அன்று படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்காரி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட சீரியல் நடிகை!! ஆனால் இன்று டாப் நடிகைகளில் ஒருவர்… யார் தெரியுமா??

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பெரியளவில் ஹிட் கொடுத்த சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் நடிகை ஆல்யா மானசா, நடிகர் சஞ்சீவ் இணைந்து நடித்த இந்த சீரியல் டிஆர்பியில் மற்ற சீரியலை தூக்கி முதல் இடத்தை பிடித்தது.

மேலும் இந்த சீரியலில் நடித்த ரீல் ஜோடிகள் தற்போது ரியல் ஜோடிகளாக திருமணம் செய்துக்கொண்டு ஒரு பெண் குழந்தையும் பெற்றுக்கொண்டனர். ஆல்யா குழந்தை பெற்ற சில மாதங்களில் உடல் எடையை குறைத்து போட்டோ ஷூட், டிக்டாக் வீடியோ, நடன வீடியோ போன்றவற்றை இணையத்தில் வெளியிட்டு வந்தார்.

அதன் பின் மீண்டும் ராஜா ராணி 2 சீசனில் நடித்து வருகிறார். சமீபத்தில் இணையத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதிலளித்த ஆல்யா மானசா, நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு ஆலியா, நான் 12 வகுப்பு படித்து முடித்தப் பின் எத்திராஜ் கல்லூரியில் பிஎஸ்சி கம்யூட்டர் சைன்ஸ் பட்டப் படிப்பினை படிக்க ஆரம்பித்தேன். சில காரணங்களால் படிப்பை நிறுத்தி விட்டு நடிக்க ஆரம்பித்தேன். எனக்கு விசா எம்பசி அ திகாரியாக இருக்க வேண்டும் என ஆசை இருந்தது என்று கூறியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *