அட ஒரு காலத்தில் நடிகர் விஜய்யை துரத்தி துரத்தி காதலித்த பிரபல நடிகை!! இப்போ பட வாய்ப்பு இல்லாமல் சீரியலில் நடிக்கும் நிலைமை… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் மனதை திருடி விட்டாய் என்ற திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன். இவர் அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஸ்ரீ போன்ற பல திரைப்படங்களில் துணை காதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் நடித்துள்ளார். அதன் பிறகு “வசீகரா” திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் விஜயை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும், தொகுப்பாளனியாகவும் பணியாற்றி வந்தார். மேலும் சன் டிவியில் நந்தினி சீரியல் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ் கடலுக்குள் நீச்சலடிக்கும் ஸ்கூபாடை விங் கற்று பயிற்சியாளராக பணியாற்றினார்.

இந்நிலையில் அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இவர் இளம் வயதிலிருந்தே மருத்துவம் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தாராம். 12 ம் வகுப்பில் 96% மார்க் பெற்றிருந்தாலும் இவருக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்கவில்லையாம். இதனால் சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பிசியோதெரபி படித்து இருக்கிறார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *