திரையுலகில் மலையாள நடிகையாக அறிமுகமாகி அதன் பின் தமிழில் முடியாண்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதன் பின் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். நடிகை பூர்ணா மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்து வந்தார்.
அதுமட்டுமின்றி இவர் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு தொழிலதிபர் சானித் ஆசிஃப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணமாகி இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
மேலும் திருமணத்திற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ஒரு சில படத்தில் கதநாயகியாகவும் நடித்து வந்தார். சமீபத்தில் டெவில் என்ற படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை பூர்ணா குழந்தை பெற்ற பின் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் குண்டாகி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
View this post on Instagram