தயாரிப்பாளர் ரவீந்தர் திடீர் கைது… முதல் திருமண நாளை கொண்டாடிய ஒரே வாரத்தில் இப்படியா??

சினிமா

திரையுலகில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் ஒரு சில படங்கள் தயாரித்து இருக்கிறார். மேலும் அவர் பிக்பாஸ் ஷோ பற்றி விமர்சனம் பேசி அதிகம் பாப்புலர் ஆனவர். அவர் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை கடந்த ஆண்டு ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

மேலும் சமீபத்தில் முதல் திருமண நாளை ஜோடியாக அவர்கள் கொண்டாடி இருந்தனர். இந்நிலையில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

அதாவது திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஒரு ப்ராஜெக்ட்டில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக 16 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றி இருப்பதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.  மேலும் இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *