திரையுலகில் நடிகர் நடிகைகளை குறித்து பல சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை கிளப்புவதை வழக்கமாக வைத்துள்ளவர் தான் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், ரவீந்தர் சந்திரசேகர், மகாலட்சுமி பற்றி பேசியுள்ளார்.
மேலும் அதில் அவர் கூறுகையில் ரவீந்திர சந்திரசேகர் சொந்த காசில் மூன்று படங்களை தயாரித்தார். அந்த படங்கள் அனைத்தும் அவருக்கு பெரும் நஷடத்தை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன் திடக்கழிவுகளில் மோசடி செய்ததாக ரவீந்தர் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரவீந்தர் சந்திரசேகரன் மனைவி மகாலட்சுமி ஆறு ஆண்டுகளுக்கு முன் செய்தி வாசிப்பாளராக இருந்தார். அப்போதே பல பேர் அவரை ஜொள்ளு விட்டனர். திடீரென மகாலட்சுமி திருமணமான நபரை திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாலட்சுமி முதல் கணவரை கழட்டி விட்டு ரவிந்தர் சந்திரசேகரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். வீட்டிற்கு மகாலட்சுமி வந்தால், ஓஹோ.. என குடும்பம் இருக்கும் என சொல்வதற்கு பதிலாக, வீட்டிற்கு மூதேவி வந்து புருஷனை ஜெயிலுக்கு அனுப்பிட்டா என்று அவர் வீட்டில் பேச ஆரம்பித்து விட்டார்கள். என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்…