தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிந்து. இவர் இணைந்த கைகள், பரம்பரை, நம்ம வீட்டு கல்யாணம், ஏவிஎம் தயாரித்த அன்பே அன்பே போன்ற 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதன் பின் பிரபலமான சீரியலான ‘மெட்டி ஒலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இவர் கன்னடத் திரைப்பட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து அவரை விட்டு பிரிந்தார். அதன் பின் 33 வயதான நடிகை சிந்து சாலையில் விழுந்து இறந்து கிடந்தார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
மேலும் இவர் பிரபல தொலைகாட்சி நடிகர் ரிஷியை திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு சுனாமி கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக சென்னை அண்ணாநகரில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் வீதி வீதியாக, ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகை சிந்து ஆர்வமாக கலந்து கொண்டு 10 கி.மீ தூரம் நடந்து சென்று நிதி திரட்டினார். அப்போது மதியம் 2 மணியளவில் மயங்கி நடு ரோட்டில் விழுந்து சிந்து பேச முடியாமல் தவித்தார். அவரை உடனே அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன் பின் அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் நடிகை சிந்துவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. நடிகை சிந்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது காப்பாற்ற முடியவில்லை. இவரின் மரணம் சிந்து திரையுலகினர் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது….