தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரது மகள் மீரா வயது (16) தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
மன அழுத்தத்தில் இருந்த இவர் இரண்டு தினங்களுக்கு முன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் விபரீத முடிவால் அதிர்ச்சியில் ஆழ்ந்த குடும்பம் கதறியழுது நேற்றைய தினத்தில் மகளை வழியனுப்பி வைத்துள்ளனர். அப்பொழுது ஆலய வழிபாட்டில் அவரது தாய் கண்ணீர் மல்க மகளைக் குறித்து பேசியுள்ளார்.
பாத்திமா பேசுகையில் உன்னை கருவில் சுமந்ததை நினைத்து பெருமை அடைகின்றேன்… இந்த ஜென்மத்தில் பிரிந்தாலும் அடுத்த ஜென்மத்தில் சேர்ந்து வாழ்வோம்… என்ன பிரச்சனையாக இருந்தாலும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே… என்று கதறியழுதுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், மீரா தங்கம்… செல்லம்… குட்டி… ஏன் நீ சென்றாய்? ஏன் நீ சென்றாய்? எழுந்திருமா எழுந்திரு… நீ ஒரு சேடிஷ்.. சீக்கிரமாக செல்ல ஆசைப்பட்டாயா? ரொம்ப அவசரப்பட்டு போயிட்டியேமா… உங்க அப்பாவிற்கும் தங்கைக்கும் நான் என்ன பதில் சொல்லுவேன்… அம்மா உன்மேல கோபமா இருந்தேனு நினைக்காதடா… அப்செட்டாக இருந்தேன்.. மீரா தங்கம் ஐ லவ் யூ டா…. ஐ லவ் யூ சோ மச்… என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
மீராவின் தாய் இவ்வாறு பேசிய நிலையில், மீரா தனது தாயார் பேசாமல் இருந்த காரணத்தினால் தான் மீராவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது…