நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த காமெடி நடிகை ஷோபனா திடீரென்று யாரால் எப்படி இறந்து போனார் தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் வைகைப் புயல் ஒரு லிஜெண்ட். அதனால் தான் அவரோடு நடிப்பவர்கள் கூட பேசப்படும் நபர்களாக மாறி விடுகிறார்கள். நடிகர் சூர்யா நடித்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் அவரது மனைவியாக நடித்த நடிகை ஷோபனாவும் பிரபலமானார்.

நடிகை ஷோபனா கொஞ்சம் கொஞ்சமாக சினிமாத் துறையில் வளர்ந்து வந்த போதே கடந்த 2011ல் தற்கொலை செய்து கொண்டார். ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் வடிவேலு இவரை மிரட்டிக் கொண்டே சும்மா பேசிக்கிட்டு இருக்கேன் மாமா என சொல்லும் காமெடி மிக பிரபலமானது.

மேலும் இதே போல் இதற்கு முன் நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியோடு சேர்ந்து மீண்டும் மீண்டும் சிரிப்பு தொடரிலும் சன் டிவியில் நடித்திருந்தார். 32 வயது வரை திருமணம் செய்து கொள்ளாத நடிகை ஷோபனா தனது அம்மா வைரம் ராணியுடன் கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த 2011ல் ஒரு நாள் தன் வீட்டிலேயே தூக்கு மாட்டிக் கொண்டார்.

மேலும் இது குறித்து அவரது தாயார் கூறினார். அதில் அவர் ஷோபனா சில்லுன்னு ஒரு காதல், சுறான்னு 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகை ஷோபனா ஒருத்தரை காதலிச்சா. ஆனா அவ கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி ஏமாத்திட்டான். அது அவ மனசுல ரொம்ப பதிஞ்சுருச்சு. நானும் வேற பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு நினைச்சேன்.

ஆனால் ஷோபனா கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டா. சிக்கன் குனியா காய்ச்சல் வந்து கஷ்டப்பட்டா. எல்லாம் சேர்த்து மன அழுத்தம் அவளை தற்கொலைக்கு தள்ளிடுச்சு என்று அவரது தாய் கூறியுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *