கமல் கூட சொல்லிட்டு தான் மேல கை வைப்பார்… நீங்க உங்க இஷ்டத்துக்கு கை வைக்கிறீங்க… பிரபல நடிகரை திட்டிய முன்னணி நடிகை!! கடைசில அந்த நடிகரை தான் கல்யாணம் பண்ணிருக்காங்க…!!

சினிமா

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்து பின் குணச்சித்திர நடிகையாக மாறியவர் நடிகை நிரோஷா. இலங்கையில் பிறந்த இவர் நடிகை ராதிகாவின் சகோதரி ஆவார். இவரும் நடிகர் ராம்கியும் கடந்த 1998ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டனர்.

மேலும் இவர்கள் இருவரும் பல பிரச்சனைகளை கடந்தே வாழ்வில் இணைந்தார்கள். இது குறித்து நடிகை நிரோஷா அளித்த பேட்டியில் நான் சென்னை, இலங்கை, லண்டன் மூணு இடங்களில் படிப்பை முடித்தேன். சினிமாவுக்கு வந்த பின் “செந்தூரப்பூவே” படப்பிடிப்பில் எனக்கும் ராம்கி சாருக்கும் நிறைய சண்டை நடக்கும்.

அப்போது அவர் அந்த படத்தில் என்னைத் தண்ணியில இருந்து தூக்கும் சீன்ல, கமல் சார் கூட என்கிட்ட சொல்லிட்டு தான் மேல கை வைப்பார். நீங்க உங்க இஷ்டத்துக்குக் கை வைக்கிறீங்க என அவரைத் திட்டிட்டேன். ஒரு முறை படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக 2 ரயில்களுக்கு இடையில் நான் சிக்கிக் கொண்டேன்.

அதன் பிறகு கொஞ்சம் விட்டிருந்தாலும் நசுங்கியிருப்பேன். அப்போ ரியல் ஹீரோ மாதிரி ராம்கி தான் என்னைக் காப்பாத்தினார். அதன் பிறகு மருத்துவமனைக்கு போகும் போது என் கை மீது அவர் கையை வைத்து நான் இருக்கேன் உனக்கு ஒண்ணும் ஆகாது தைரியமா இரு என சொன்னார்.

அப்போது தான் என் மனதை அவரிடம் பறி கொடுத்தேன். பிறகு இருவருக்குள்ளும் சண்டைகள் நீங்கி ஒருத்தரை இன்னொருத்தர் புரிந்துக்கொண்டு தேட ஆரம்பிச்சு பிறகு காதலர்களானோம் என நடிகை நிரோஷா கூறியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *