திரையுலகைப் பொறுத்தவரை சமீப காலமாகவே தொடர்ந்து பல உயிரிழப்புக்கள் நடந்து வருகிறது. மேலும் அந்த வகையில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநரும் , நடிகையுமான ஜெயதேவி இன்று அதிகாலை திடீரென மரணமடைந்தார்..
மேலும் இவர் இவர் வாழ நினைத்தால் வாழலாம், நன்றி மீண்டும் வருக, புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது’ போன்ற பல படங்களை தயாரித்துள்ளதோடு, விலாங்கு மீன், பவர் ஆப் வுமன் , புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் வேலு பிரபாகரனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும் இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்…