தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அதர்வா. இவர் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த ஆகஸ்ட் மாதம் தளபதி விஜய்யின் மாமா பொண்ணுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பிக்கும் திருமணம் முடிந்தது. அதர்வாவின் திருமணம் எப்போது என கேள்வி எழுந்தது.
மேலும் இந்நிலையில் நடிகர் அதர்வாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாகி வருகின்றது. அதுவும் அவர் காதலித்து வரும் பெண்ணுடனே திருமணம் என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதர்வாவிற்க்கும் கோவாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையில் சில வருடங்களாக காதல் இருந்து வருகிறதாம். இதனால் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த பின்னரே திருமணம் செய்து கொள்ளலாம் என்று உறுதியாக இருந்து வந்தார்கள். ஆனால் இரு வீட்டார் சம்மதம் தா மதம் ஆனதால் அதர்வாவின் தம்பி திருமணம் முன் கூட்டியே முடிந்து விட்டது.
தற்போது தம்பிக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதால் தன்னுடைய திருமணம் குறித்து முடிவெடுக்க வீட்டில் கேட்டிருக்கிறார். அவரது அம்மாவும் சம்மதித்து விட்டதாக சொல்கிறார்கள். இந்த தகவல் பெண் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்..