தவறுதலாக கைபட்டு கணவனுக்கு சென்ற போன் கால்… மனைவி பேசியதைக் கேட்டு உயிரை விட்ட கணவன்!! அப்படி என்ன பேசினார் தெரியுமா??

Tamil News

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் Gareth rees. இவரது மனைவி claire. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். ஆனால் கணவருக்கு தனது மனைவியை பிரிந்தது மிகவும் கஷ்டமாக இருந்துள்ளது. இதனால் தனது மனைவியின் தொலைபேசிக்கு குறுஞ் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேலும் இந்நிலையில், claire தனது புது காதலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது Gareth rees அனுப்பிய குறுஞ் செய்தியை பார்த்த claire தனது முன்னாள் கணவரின் அந்த குறுஞ் செய்திக்கு பதிலளிக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கே தெரியாமல் தவறுதலாக பழைய கணவருக்கு போன் அழைப்பு சென்றுள்ளது.

இதனை கவனிக்காத claire தனது புது காதலனுடன் தனது உ றவு குறித்து பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை கேட்டுக் கொண்டிருந்த claire யின் பழைய கணவன் இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு மனம் உடைந்து விட்டார். இறுதியில் ஐயோ நான் அந்த குறுஞ் செய்திக்கு பதில் அளிக்க வில்லையே என போனை பார்த்த claire தனது முன்னாள் கணவருக்கு போன் அழைப்பு சென்றிருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகி மன உளைச்சல் அடைந்துள்ளார்.

உடனே தனது முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கேட்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு இல்லை. அந்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் Gareth-யின் நண்பர் வெளியூருக்குச் சென்றிருப்பதால் அவரின் வீட்டைக் கவனித்துக் கொள்ள Gareth அங்குச் சென்றிருப்பதாக அந்த நபர் கூறியுள்ளார்.

அவர் கூறிய இடத்திற்கு claire சென்று பார்த்த போது Gareth rees. மது போதையில் நீச்சல் குளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் கடுமையான மன அழுத்ததால் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்டு நொறுங்கிப் போன claire, தனது தவறான தொலைபேசி அழைப்பினால் Gareth இறந்து விட்டார் என அழுது புலம்பியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *