திரையுலகை பொறுத்தவரை தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு எத்தனையோ பல இளம் மாடர்ன் நடிகைகள் படங்களில் கிளாமராக நடித்து வருகின்றன. ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இன்று இத்தனை நடிகைகள் வந்த போதிலும் பல ரசிகர்களின் மனதில் தனக்கென இடம் மற்றும் பலரின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் தான் பிரபல நடிகை சில்க் ஸ்மிதா.
மேலும் இவர் நடித்த திரைப்படங்களில் தனது வசீகரமான தோற்றம் மற்றும் அழகான பேச்சு காந்தம் போல் இழுக்கும் கண் போன்றவையால் இவர் வெகுவாக மக்களை கவர்ந்தார். இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழை தண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார்.
நடிகை சில்க் ஸ்மிதா இளம் வயதிலே எதிர்பாராத விதமாக தனது உயிரை மாயித்து கொண்டார். இவர் முதன் முதலில் வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானர். இவரை அறிமுகபடுத்தியது மறைந்த பிரபல முன்னணி நடிகர் வினு சக்கரவர்த்தி தான். இவர் வில்லன், காமெடி, குணச்சித்திரம் போன்ற கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சில்க் ஸ்மிதாவை எப்படி சினிமாவில் அறிமுகபடுத்தினேன் என்று அப்போதே ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதில் நான் நடித்து கொண்டிருந்த படம் ஒன்றில் பட தயாரிப்பாளர் ஒரு கிளாமர் பாடலுக்கு நடனமாட பல நடிகைகளின் பெயர்களை வைத்து இருந்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை புதுசாக ஒரு நடிகையை அறிமுகம் செய்ய இருந்தேன்.
ஒரு நாள் எதிர்ச்சியாக மாவு அரைக்கும் மிசின் பக்கத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன் உடனே அவள் என்னை பார்த்த பார்வையில் அவளது கண்கள் என்னை காந்தம் போல் இழுத்தது. உடனே அந்த பெண்ணிடம் பேசினேன். பெண்ணின் பெயர் கேட்டதற்கு விஜயமாலா என்று கூறினார். தான் ஆந்திராவை சேர்ந்தவர் என்று கூறினார். தமிழ்நாட்டிற்கு வந்து 17-நாட்களே ஆகிறது.
நான் அந்த பெண்ணிடம் நடிக்க ஆசையா என்று கேட்டேன் அதற்கு அவர் நான் எங்கள் ஊர் விழாக்களில் நடனமாடி இருக்கேன். எனக்கு நடிக்க ஆசை இருக்கு என கூறினார். அவருக்கு எப்படி பேசுவது நடிப்பது என அனைத்தையும் கற்று கொடுத்தேன் அந்த பெண்ணும் அதை உடனே கற்று கொண்டாள். அந்த பெண்ணை இயக்குனர், தயாரிப்பளர்கள் முன்னிலையில் காண்பித்தவுடன் அவர்கள் வியந்து போயுள்ளன.
இவர் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தனது நடிப்பால் கலக்க போகிறார் என்று கூறினார்கள். அதே போல் இவரும் தனது வசீகரமான நடிப்பால் சினிமாவில் வலம் வந்தார். ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லைல். அவரது பெற்றோர் அவருடன் இல்லாததே இவரது இந்த நிலைக்கு காரணம் என்று கூறியிருந்தார்…