திரையுலகில் பல இயக்குனர்கள் வெற்றிப் படங்களை இயக்கி வந்த நிலையில் அடுத்த கட்டமாக கதாநாயகனாக படங்களில் நடித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் 80, 90-களின் கால கட்டத்திலே முன்னணி நடிகர்களை வைத்து நல்ல கதைகளை கொண்ட படங்களை இயக்கியதோடு படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனது நடிப்பின் மூலம் பிரபலமானதை தொடர்ந்து.
ஹீரோவாக படங்களில் நடிக்க துவங்கி தற்போது திரையுலகில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் பாக்கியராஜ். இவர் படங்களில் நடித்து கொண்டிருக்கும் போதே அவருடன் படங்களில் நடித்த பிரபல முன்னணி நடிகையான பிரவீனாவை காதலித்து கடந்த 1983-ல் திருமணம் செய்து கொண்டார்.
கல்யாணமாகி இரண்டு வருடங்களே இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் பிரவீனா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு காலமானார். அதன் பின் அவரது நினைவில் சில காலம் தனித்து வாழ்ந்து வந்த பாக்யராஜ் பின் நடிகை பூர்ணிமாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் சாந்தனு மற்றும் சரண்யா.
மேலும் இருவரும் படங்களில் நடித்து வரும் நிலையில் சாந்தனு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன் அவரது தங்கையான சரண்யா தமிழில் பாரிஜாதம் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டார். ஒரு சில படங்களிலேயே நடித்த சரண்யா அதன் பின் என்ன ஆனார் என தெரியாமல் போனது.
சாந்தனு படங்களில் ஹீரோ மற்றும் குணசித்திர கதாபதிரங்களில் நடித்து நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க பாக்யராஜும் பிரபல முன்னணி நடிகையான ஐஸ்வர்யாவும் கடந்த 1992-ம் ஆண்டு வெளிவந்த ராசுகுட்டி எனும் படத்தில் ஒன்றாக இணைந்து ஜோடியாக நடித்து இருந்தார்கள்.
இந்த படம் நகைச்சுவை கலந்த காதல் படமாக அமைந்து இருந்தது இந்த படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இறுதியாக சுயம்வரம் படத்தில் நடித்து இருந்தார்கள். அதன் பிறகு இருவரும் இணைந்து வேறு எந்த படத்திலும் நடிக்காத நிலையில் தற்போது இருவரும் 30வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்றாக நடிக்க போவதாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இருப்பினும் அந்த படத்திற்கான எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் இன்னும் வெளியாகத நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரளாகி வருகிறது.